Monday, March 5, 2012

மார்ச் 4, 2012

எப்பொழுதும் மறையாத ஒளி இயேசுவே! - திருத்தந்தை

   ரோமின் புனித ஜான் பாப்டிஸ்ட் தெ லா சால் பங்கு ஆலயத்திற்கு சென்று அங்கு திருப்பலி நிறைவேற்றி இன்றைய நாளினைத் தொடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள சிறுவர் களிடம் இயேசுவைப் பற்றியும், அவரது சொல், செயல் பற்றியும், அவர் அனுபவித்த வேதனைகள் பற்றியும் அறிந்து கொள் ளுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், திருச்சபை மற்றும் திருவருட்சாதனங்கள் பற்றி கற்றுக்கொள்ளு மாறும் கூறினார்.
  வத்திக்கான் திரும்பியதும், தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியி ருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் உரு மாற்றம் குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை விளக்கினார்.
   இயேசு திருத்தூதர்கள் முன்பு உருமாற்றம் அடைந்தபோது, அங்கு முக்கியமாக இருந்தவை ஒளியும் குரலுமே; அதாவது இயேசுவின் முகத்தில் ஒளிர்ந்த தெய்வீக ஒளியும், அவரோடு பேசிய விண்ணகத் தந்தையின் குரலும் ஆகும். தான் உயிர்த் தெழுமாறு, துன்பங்களுக்கு உட்பட்டு, சிலுவையில் இறக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தும், இயேசு அடைந்த உருமாற்றத்தின் மறைபொருள் அவரது பணி வாழ்வின் நிறைவை நோக்கியதாக இருந்தது.
   இயேசு தனது நண்பர்களையும் தன்னோடு மலைக்கு அழைத்துச் செல்கிறார். ஏனெனில் அவரில் வாழுகின்ற, மிகவும் நெருக்கமான இந்த ஒளியின் அனுபவத்தை அவர்களுக்கு அளிக்க விரும்பினார். அதனால் இந்த நிகழ்வுக்கு பின், அவர் அவர்களது உள் ஒளியாக இருக்க முடியும்; மேலும், இருளின் தாக்குதல்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்க முடியும். நாமும் நம் வாழ்வின் துன்பச் சூழல்களை வெற்றிகொள்ள உள் ஒளி தேவைப்படுகிறது. இயேசுவே எப்பொழுதும் மறையாத ஒளியாக இருக்கிறார்.
   இறுதியாக ஆங்கிலத்திலும் வேறு பல மொழிகளிலும் பேசிய திருத்தந்தை, தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் தியாகச் செயல்கள் கிறிஸ்துவின் ஒளியைப் புதுப்பிக்கும் அனுபவத்துக்கு மக்களை வழிநடத்திச் செல்லும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார்.