Sunday, September 2, 2012

செப்டம்பர் 2, 2012

கடவுளின் திருச்சட்டம் தனது உண்மையான
அர்த்தத்தை இழப்பது ஆபத்தானது - திருத்தந்தை

   திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்ல மான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றிய தன் கருத் தினை எடுத்துரைத்தார்.
   நமது மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் இவ்வுலகப் பொருள்களிலும் அதிகாரத்திலும் மற்ற கண்கவர் பொருள்களிலும் வைக்கும் போலியான சமய உணர் வைக் குறித்து எச்சரியாய் இருங்கள். சமயத்தை இரண்டாம்தர நிலைக்கு குறைத்து பார்க்கும் ஆபத்து ஒவ்வொரு சமயத்திலும், ஏன் கிறிஸ்தவத்திலும் பரவியிருப்பதைக் காண முடிகின்றது. கடவுளின் திருச்சட்டத் தைத் தமது வாழ்வில் ஏற்று அதனை முழுமையாய் வாழும் ஒவ்வொருவருக்கும் அச்சட்டம் விடுதலையைக் கொண்டு வருகிறது. மனிதரை வாழ்வின் பாதையில் வழிநடத்தி, தன்னல அடிமைத்தனத்தினின்று விடுதலை செய்து, உண்மையான சுதந்திரம் மற்றும் வாழ்வின் பூமியை அவருக்கு அறிமுகம் செய்யும் கடவுளின் திருவார்த்தையே கடவுளது திருச்சட்டமாகும். இதனாலே திருச்சட்டம் விவிலியத் தில், அதிகப்படியான வரையறையைக் கொண்டுள்ள சுமையாகப் பார்க்கப்பட வில்லை, ஆனால் அது நம் ஆண்டவரது மிக விலையுயர்ந்த கொடையாகவும், அவரது தந்தைக்குரிய அன்புக்கு சான்றாகவும், தமது மக்களோடு நெருங்கி இருந்து அன்பு வரலாறு எழுதுவதற்கான அவரது ஆவலாகவும் இருக்கின்றது. அதேநேரம், கடவுளின் திருச்சட்டமும், சமயமும் தங்களது உண்மையான அர்த்தத்தை இழப்பது ஆபத்தானது. கடவுளின் திருச்சட்டத்தை பின்பற்றுவதன் உண்மையான பொருள் கடவுளுக்கு செவிமடுத்து வாழ்வதாகும்.
   மூவேளை செபத்தின் இறுதியில், லெபனான் திருப்பயணிகளைப் பிரெஞ்ச் மொழி யில் வாழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இம்மாதம் 14 முதல் 16 வரை அந்த நாட்டுக்கு தான் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதைக் குறிப்பிட்டு அந்நாட்டு அரசு தலைவருக்கு தனது நல்வாழ்த்தையும் தெரிவித்தார்.