Sunday, July 1, 2012

ஜூலை 1, 2012

மனிதரின் உள்ளங்களை குணப்படுத்தி
மீட்பளிக்கவே இயேசு வந்தார் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏரா ளமான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய் தியை (மாற்கு 5:21-43) அடிப்படையாகக் கொண்டு தன் கருத்துகளை எடுத்துரைத்தார்.
   இந்த ஞாயிறு மாற்கு நற்செய்தியாளர், தொழு கைக்கூடத் தலைவர்களில் ஒருவரான யாயிரின் மகள் மற்றும் இரத்தப்போக்கால் வருந்திய பெண் ஆகியோருக்கு இயேசு நலமளித்த நிகழ்வை எடுத் துரைக்கிறார். இந்த இரு நிகழ்வுகளில் இரண்டு நிலை விளக்கங்கள் உள்ளன. முழுமையாக உடல் சார்ந்தது: மனிதரின் துன்பங்களை சந்திக்க இயேசு கீழே குனிந்து, உடலை நலமாக்குகிறார்; மற்றும் ஆன்மா சார்ந் தது: மனித உள்ளத்தை குணப்படுத்தி மீட்பளிக்க வந்த இயேசு, அவரில் நம்பிக்கை வைக்குமாறு கேட்கின்றார்.
   முதல் பகுதியில், யாயிரின் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தி கிடைத்ததும், தொழுகைக்கூடத் தலைவரிடம் கூறுகிறார்: "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!" இயேசு அவரை அழைத்துக்கொண்டு, சிறுமி இருந்த இடத்திற்கு அவரோடு சென்று, "சிறுமியே, உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு!" என்று கூறுகிறார். உடனே அவள் எழுந்து நடக்கிறாள். இந்த வார்த்தைகளைப் பற்றி, இயேசுவின் மீட்பளிக்கும் ஆற்றலைப் பற்றி புனித ஜெரோம் இவ்வாறு கூறுகிறார்: "சிறுமியே, என் வழியாக எழுந்திடு: உனது சொந்த தகுதியால் அல்ல, எனது அருளால். எனவே என் வழியாக உயிர்த்தெழு: நலமடைதல் உனது நற்செயலைச் சார்ந்தது அல்ல."
   இரண்டாவது பகுதியில் உள்ள இரத்தப்போக்கால் வருந்திய பெண்ணைப் பற்றிய செய்தி, இயேசு மனிதருக்கு முழுமையில் விடுதலை அளிக்க வந்தார் என்பதை வலியுறுத்துகிறது. உண்மையில் இந்த அற்புதம் இரண்டு படிகளில் நடக்கிறது: முதலாவது குணப்படுத்துதல் உடல் சார்ந்தது, ஆனால் இது (இரண்டாவது) ஆழ்ந்த குணப்படுத்துதலோடு தொடர்புடையது, அது கடவுளுக்கு தங்களை நம்பிக்கையோடு திறப்பவர்களுக்கு அவரது அருளை அளிக்கிறது. இயேசு அப்பெண்ணிடம் கூறினார்: "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு!"
   நலமாளித்தல் பற்றிய இந்த இரண்டு நிகழ்வுகளும், கிடைமட்டமான பொருள் சார்ந்த வாழ்க்கைப் பார்வையை வெற்றிகொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நமது பிரச்சனைகளைத் தீர்க்குமாறும், தேவைகளை நிறைவேற்றுமாறும் நாம் அடிக்கடி கடவுளைக் கேட்கிறோம் - அது சரியே! ஆனால் நாம் அதிகமாக கேட்க வேண்டியது எப்பொழுதும் உறுதியான நம்பிக்கை, ஏனெனில் ஆண்டவர் நமது வாழ்வைப் புதுப்பிக்கிறார்; மேலும் அவரது அன்பில் நம்பிக்கை வைப்போம், அவரது அருள் நம்மைக் கைவிடாது.
   மனிதரின் துன்பங்களை கவனிக்கிற இயேசு, நோயாளிகள் தங்கள் சிலுவைகளை சுமக்க உதவுகிற மருத்துவர்கள், நலவாழ்வு பணியாளர்கள், மருத்துவமனைகளில் மேய்ப்புப்பணி புரிவோர் உள்ளிட்ட அனைவரையும் நாம் நினைத்து பார்க்கத் தூண்டு கிறார். அங்கு 'நிறைந்திருக்கும் அன்பு', துன்புருவோருக்கு அமைதியையும் நம்பிக்கை யையும் கொண்டு வருகிறது. 'அன்பே கடவுள்' என்ற சுற்றுமடலில், "இந்த விலை மதிப்பற்ற சேவையில் ஒருவர் முதலில் தொழில் ரீதியாக தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்; இது முதன்மையும் அடிப்படையானதுமாக இருந்தாலும், இது மட்டுமே போதாது" என்று சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
   இந்த சேவையில் உண்மையில், மனிதநேயமும், உள்ளார்ந்த அக்கறையும் முக்கியமாக தேவைப்படுகின்றன. எனவே, தொழில் ரீதியான பயிற்சியோடு கனி வான உள்ளத்தை உருவாக்குவதும் இத்தகையப் பணியாளர்களுக்கு அனைத்துக்கும் மேலான தேவை; இது அவர்களை கிறிஸ்துவில் உள்ள கடவுளை எதிர்கொள்ளச் செய்து, அவர்கள் அன்பில் நிலைத்திருக்கவும், தங்கள் ஆன்மாவைப் பிறருக்கு திறக்க வும் வழிநடத்திச் செல்ல வேண்டும்.
   நமது விசுவாசப் பயணத்திலும், நமது அன்பை செயலாக்குவதில், குறிப்பாக தேவையில் இருப்போருக்கு வெளிப்படுத்துவதிலும் கன்னி மரியாவைத் துணைக்கு அழைப்போம். உடலளவிலும், ஆன்ம வழியிலும் துன்புறுவோருக்காக அவரது பரிந் துரையையும் வேண்டுவோம்.