Sunday, October 28, 2012

அக்டோபர் 28, 2012

ஒருவர் வாழ்வின் பாதையில் நடக்க விரும்பினால்
அவருக்கு இறைவனின் ஒளி தேவை - திருத்தந்தை

   13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை, இம்மாதம் 7ந் தேதி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தித் தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறன்று அதனை கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு செய்தார். பார்வையற்ற பர்த் திமேயு இயேசுவால் பார்வை பெற்றதை விளக்கும் இஞ்ஞாயிறு மாற்கு நற்செய்தி வாசகத்தை அடிப் படையாக வைத்து இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரை நிகழ்த்தினார்.
   பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெற்ற புதுமை புனித மாற்கு நற்செய்தியின் அமைப்பில் குறிப்பிடத் தக்க இடத்தில் உள்ளது. ஜோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எருசலேம் புனித நகரத் துக்குச் செல்லும் ஏற்றமான பாதையில் இயேசு எரிக்கோவைக் கடந்து செல்கிறார். அவர் எரிக்கோவை விட்டு வெளியே சென்ற போது திமேயுவின் மகன் பர்த்திமேயு சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்று மாற்கு நற்செய் தியாளர் சொல்கிறார். புனித மாற்கு நற்செய்தி முழுவதுமே நம்பிக்கையின் பயண மாகும். இந்த நம்பிக்கை, இயேசுவின் பயிற்சிப் பள்ளியில் படிப்படியாக வளர்கிறது. இந்த நம்பிக்கையின் பயணத்தில் முதலில் சீடர்கள் வந்தாலும், மற்றவர்களும் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் பர்த்திமேயு. இவர் பார்வை பெற்றது, இயேசு தமது திருப்பாடுகளுக்கு முன்னர் ஆற்றிய கடைசி அற்புத மாகும். ஒருவர் மெய்மையை உண்மையிலேயே அறிய விரும்பினால், ஒருவர் வாழ்வின் பாதையில் நடக்க விரும்பினால் அவருக்கு நம்பிக்கையின் ஒளியாகிய இறைவனின் ஒளி தேவைப்படுகின்றது. அத்தகைய மனிதரையே பர்த்திமேயு குறித்து நிற்கிறார்.
   பர்த்திமேயு பிறவியிலேயே பார்வை இழந்தவர் அல்ல. இவர் பார்வையை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் இருப்பவரை, வாய்ப்பைப் பயன்படுத்தி இயேசுவை சந்தித்து எப்படிக் குணம் பெறுவது என்பதை அறிந்திருப்பவரைக் குறித்து நிற்கிறார். நம்பிக்கையுடன் வாழ்ந்த பர்த்திமேயு, கிறிஸ்துவைச் சந்திப்பதில் மீண்டும் பார்வை பெற்று, அத்துடன் தனது மாண்பின் முழுமையையும் அடைந்து இயேசு வோடு தனது பயணத்தைத் தொடர்கிறார். பர்த்திமேயு பற்றி வேறு எதுவும் சொல்லாத நற்செய்தியாளர், நம்பிக்கையின் ஒளியில் இயேசுவைப் பின்செல்லும் சீடத்துவ வாழ்வு என்ன என்பதை பர்த்திமேயுவில் நமக்குக் காட்டுகிறார். பர்த்திமேயு, ஏதோ ஒரு வளமை நிலையிலிருந்து நொடித்துப் போனவர். பார்வையையும் இழந்து, பிச்சை எடுப்பதற்கும் அந்நிலை அவரை உட்படுத்தியிருக்கிறது. புனித அகுஸ்தீனாரின் இந்த விளக்கம் இன்று நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.
   நாம் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத வளங்களை நாமும் இழக்க முடியும். இங்கு பொருளாதார மற்றும் நிதி வளங்கள் பற்றி நான் பேசவில்லை, நீண்ட காலத் துக்கு முன்னர் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களைப் பர்த்திமேயு குறித்து நிற்கிறார் எனச் சொல்லலாம். இப்பகுதிகளில் நம்பிக்கை ஒளி மங்கி மக்கள் இறைவனைவிட்டு விலகி இருக்கின்றனர். கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் சொல்ல வேண்டுமானால் இம்மக்கள் தங்களது கம்பீரமான மாண்பிலிருந்து வீழ்ந்து, பாது காப்பான மற்றும் நல்ல வழியை இழந்து, தங்களுக்கேத் தெரியாமல் வாழ்வதன் பொருள் தேடும் பிச்சைக்காரர்களாக ஆகியுள்ளார்கள். புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி தேவைப்படும் பலரில் இவர்களும் உள்ளடங்குவர். இறை மகன் கிறிஸ்துவாகிய இயேசுவுடன் இவர்கள் புதிதாகச் சந்திப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது. கிறிஸ்து வால் இவர்களின் கண்களைத் திறந்து அவர்களுக்கான வழியைப் போதிக்க முடியும். நம்பிக்கையின் ஒளி பலவீனமடைந்துள்ள மற்றும் இறைவனின் நெருப்பு அணைந்து போனதாக இருக்கும் இடங்களில் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டும் என்பதை இஞ் ஞாயிறு நற்செய்தி நமக்குக் கூறுகிறது.
   இந்தப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருச்சபையின் வாழ்வு முழுவதிலும் செயல்படுத்தப்பட வேண்டும். திருமுழுக்கு, உறுதிபூசுதல், திருநற்கருணை ஆகிய மூன்று திருவருட்சாதனத் தயாரிப்புக்களுக்குத் தகுந்த மறைக்கல்வி வழங்கப்பட வேண்டும். இறைவனின் இரக்கத் திருவருட்சாதனமான ஒப்புரவு அருட்சாதனத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட வேண்டும். வாழ்வின் இறுதிப்பயண நோயில்பூசு தல் திருவருட்சாதனம் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மேலும், இயேசு கிறிஸ்துவை இன்னும் அறியாதோருக்கு மீட்பின் செய்தியை அறி விக்க வேண்டியது திருச்சபையின் பணியாகும். ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியா ஆகிய கண்டங்களில் பல பகுதிகளில் நற்செய்தி இன்னும் முதல்முறை அறிவிக்கப் படாமலே இருக்கின்றது என ஆயர்கள் மாமன்றத்தில் கூறப்பட்டது. எனவே, திருச் சபையில் புதிய மறைப்பணி ஆர்வம் ஏற்படுவதற்குத் தூய ஆவியிடம் செபிப்போம். அனைத்து மக்களும் இயேசு கிறிஸ்துவையும் அவரது நற்செய்தியையும் அறிவதற்கு உரிமை உள்ளவர்கள். எனவே குருக்கள், துறவிகள், பொதுநிலை விசுவாசிகள் அனைவரும் நற்செய்தியை அறிவிக்கும் கடமையைக் கொண்டுள்ளார்கள்.
   திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தங்களது திருமுழுக்குக்கு ஏற்ப வாழவில்லை. இத்தகைய மக்கள், எல்லாக் கண்டங்களிலும், குறிப்பாக, உலகாயுதப்போக்கு அதிக மாகவுள்ள நாடுகளில் இருப்பதாக ஆயர்கள் மாமன்றத்தில் கூறப்பட்டது. எனவே, பராம்பரிய மற்றும் ஆண்டுக்கணக்காய்ச் செய்துவரும் மேய்ப்புப்பணி முறைகளை யும் கடந்து புதிய முறைகளைக் கடைப்பிடிக்கும் வழிகளைத் திருச்சபைத் தேடுகிறது. அன்பாக இருக்கும் இறைவனில் வேரூன்றிய உரையாடல் மற்றும் நட்புணர்வோடு கிறிஸ்துவின் உண்மையை உலகின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு வழங்கும் புதிய மொழிகளை வளர்த்துக் கொள்ளும் வழிகளைத் திருச்சபைத் தேடுகிறது. புறவினத் தார் முற்றம் என்ற பெயரில் ஏற்கனவே சில முக்கிய நகரங்களில் மறைப்பணி செய்யப்பட்டு வருகிறது. புதிய நற்செய்தி அறிவிப்பாளர்கள், இயேசு கிறிஸ்து வழி யாக இறைவனால் குணமடைந்த அனுபவத்தைக் கொண்டவர்கள் போல் இருக்கிறார் கள். ஆண்டவரே, எங்களில் இருக்கின்ற அனைத்துப் பார்வையற்ற தன்மையையும் விலக்கி உண்மையின் வழியில் செல்ல எமக்கு உதவும்!
   திருப்பலிக்குப் பின்னர் மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுற் றிருக்கும் இவ்வேளையில், கிறிஸ்துவின்மீதான நமது நம்பிக்கையையும், மகிழ்ச்சி மற்றும் குணப்படுத்தலின் அவரின் நற்செய்தியை பரப்புவதற்கான நமது அர்ப்பணத் தையும் புதுப்பிப்போம் என்றார். கியூபா, ஹெய்ட்டி, ஜமய்க்கா, பகாமாஸ் ஆகிய நாடுகளில் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் திருத் தந்தை நினைவுகூர்ந்தார்.