Sunday, January 6, 2013

ஜனவரி 6, 2013

கிறிஸ்துவின் மிகத் ஒளி தெளிவானதாகவும்
உறுதியானதாகவும் இருக்கிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருக்காட்சித் திருவிழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்று நாம், மக்களுக்காக மனித உடலெடுத்த ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழாவை சிறப்பிக் கிறோம்; கிழக்கத்திய திருச்சபைகள் பலவும் இதே நாளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை சிறப்பிக் கின்றன. மரியா, யோசேப்பு, இடையர்கள் ஆகியோ ரின் விசுவாசத்தை கிறிஸ்துமஸ் காட்டும் அதே வேளை, திருக்காட்சி பெருவிழா கீழ்த்திசை ஞானிகளின் விசுவாசத்தை காட்டுகிறது.
   இயேசு கிறிஸ்து, அனைத்து மக்களின் பாதையை வழிநடத்தும் உலகின் ஒளி என்பதை, மூன்று கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவைப் பார்த்த நிகழ்வை நாம் சிறப்பிக்கும் திருக்காட்சித் திருவிழா நமக்குக் காட்டுகின்றது. கீழ்த்திசை ஞானிகள், கடவுளின் அமைதி, நீதி, உண்மை மற்றும் சுதந்திரத்தின் ஆட்சியைத் தேடும் பாதைகளாகிய மக்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், மதங்கள் ஆகியவற்றை குறித்து நிற்கின்றனர். விண்மீனால் வழிநடத்தப்பட்டு பெத்லகேம் குடிலை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்த இந்த மூன்று ஞானிகள், இயேசு கிறிஸ்துவை நோக்கிய நாடுகளின் திருப்பயணத்தின், மனித வரலாறு முழுவதும் நடைபெற்றுக் கொண் டிருக்கும் பெரிய ஊர்வலத்தின் தொடக்கமாக இருக்கிறார்கள்.
   கன்னி மரியா, அவரது கணவரோடு இணைந்து இஸ்ரயேலின் கிளையையும், இறைவாக்கினர்கள் மெசியா குறித்து முன்னுரைத்த கூற்றையும் குறித்து நிற்கிறார். காலம் நிறைவேறியபோது, இஸ்ரயேல் மக்களின் விசுவாசம் மரியாவில் முழுமை அடைந்தது. மரியாவின் விசுவாசம், புதிய உடன்படிக்கையின் மக்களாகிய, திருச் சபையின் விசுவாசத்தின் முதல் கனியாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றது. புதிய உடன்படிக்கையின் மக்கள் தொடக்கத்திலிருந்தே உலகளாவியத் தன்மையைக் கொண்டிருந்தனர், இதனை இன்று கீழ்த்திசை ஞானிகளின் உருவத்தில் பார்க்கிறோம். இந்த ஞானிகள் விண்மீனின் ஒளி மற்றும் மறைநூல்களின் குறிப்புகளைப் பின் தொடர்ந்து பெத்லகேம் சென்றவர்கள்.
   மரியாவின் விசுவாசத்தை ஆபிரகாமின் நம்பிக்கையோடு ஒப்பிடலாம்: இது வாக்களிக்கப்பட்ட கடவுளின் திட்டத்தில் ஒரு புதிய தொடக்கம், அது இப்பொழுது இயேசு கிறிஸ்துவில் நிறைவைக் காண்கிறது. கிறிஸ்துவின் ஒளி மிகத் தெளிவான தாகவும் உறுதியானதாகவும் இருக்கின்றது, இது பிரபஞ்சத்தின் மொழியை உரு வாக்குவதுடன் மறைநூல்களை தெளிவுபடுத்துகிறது. இந்த ஞானிகளைப் போன்று உண்மைக்குத் திறந்தவர்களாய் இருப்பவர்கள் அனைவரும், அதைக் கண்டறிந்து உலகின் மீட்பரைத் தியானிப்பதற்கு இணைய முடியும். புனித பெரிய லியோ கூறுவது போன்று, "இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவரை மக்கள் அனைவரும் ஆராதிப்பார்க ளாக; யூதேயாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கடவுளை அறிந்துகொள்வதாக!"