Sunday, May 6, 2012

மே 6, 2012

இயேசுவை அன்புசெய்வோர் ஆன்மீக அறுவடைக்காக
மிகுதியான கனிகளை விளைவிக்கின்றனர் - திருத்தந்தை

   இன்று உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு பாஸ்கா மூவேளை செப உரை வழங்கி னார்:
   இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்" என்று கூறுகிறார். நாம் திருமுழுக்கு பெற்ற நாளில், திருச்சபை கிறிஸ்துவின் மறை பொருளில், அவரது தனித்தன்மையில் நம்மை கிளை களாக ஓட்டி இணைத்தது. "நாம் ஒவ்வொருவரும் ஒரு திராட்சைச் செடியைப் போன்றவர்கள்; அது ஒவ்வொரு நாளும் செபத்திலும், அருட்சாதனங்களில் பங்கு கொள்வதிலும், பிறரன்பிலும், ஆண்டவரோடு இணைந் திருப்பதிலும் வளர்கிறது" என்பதை நினைவில்கொள்ள அவர் இறைமக்களை அழைக் கிறார். மேலும், உண்மை திராட்சைச் செடியாகிய இயேசுவை அன்புசெய்வோர், ஆன் மீக அறுவடைக்காக விசுவாசத்தின் கனிகளை மிகுதியாக விளைவிக்கின்றனர். நாம் தொடர்ந்து இயேசு வோடு உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கவும், நமது செயல்கள் அனைத்தும் அவரில் தொடங்கி, அவரிலேயே நிறைவு காணவும், நாம் இறையன்னையின் உதவியை வேண்டுவோம்.
   செப உரையின் இறுதியில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை இவ்வாறு கூறினார்: "இன்றைய பாஸ்கா மூவேளை செபத்தில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும், சிறப்பாக இந்தோ னேஷியாவில் இருந்து பெருமளவில் வந்திருக்கும் திருப்பயணிகளுக்கும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை உண்மையான திராட்சைச் செடி என்று குறிப்பிட்டு, அதன் கனி தருகின்ற கிளைகளாக இருக்க அவர் நம்மை அழைக்கின்றார். உலகெங்கும் வாழும் கடவுளின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையிலும் அன்பிலும் வளரவும், அவரால் ஆழமாக விதைக்கப்பட்ட தெய்வீக வாழ்வால் நீடித்த ஊட்டம்பெறவும் நான் செபிக்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!"