Sunday, June 3, 2012

ஜூன் 3, 2012

இது குடும்பங்களின் நாள் - திருத்தந்தை

   இத்தாலியின் மிலான் மறைமாவட்டத்தில் நடை பெற்ற குடும்பங்களின் மாநாட்டில் கலந்துகொண்டு, நிறைவு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மறையுரை ஆற்றினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   நற்கருணைப் பலியைக் கொண்டாடும் இந்த காலை நேரத்தில் நாம் பெருமகிழ்ச்சியையும், ஒற்றுமையை யும் உணர்கிறோம். பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் விசுவாசிகள், பேதுருவின் வழிவருப வரோடு ஒன்றித்திருக்கும் ஒரு பெரும் ஒன்றுகூடல். நீங்கள் போய் எல்லா மக்க ளினத்தாரையும் சீடராக்குங்கள்; "தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திரு முழுக்குக் கொடுங்கள்" என்று நாம் இன்றைய  நற்செய்தியில் கேட்டது போன்று, இது இயேசுவால் அவரது திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியின் கனியும், கிறிஸ்துவால் நிறுவப்பட்ட ஒரே உலகளாவிய திருச்சபையின் ஓர் ஆற்றல்மிக்க சாயலாகவும் உள்ளது. கர்தினால் ஏஞ்சலோ ஸ்கோலா, மிலான் பேராயர் மற்றும் குடும்பத்துக்கான பாப்பிறை அவையின் தலைவர் கர்தினால் என்னியோ ஆன்ட்டோ னெல்லி, தங்கள் ஊழியர்களோடு இணைந்து இந்த ஏழாவது உலக குடும்பங்களின் சந்திப்பை வடிவமைத்தவர்கள், மிலான் துணை ஆயர்கள், மேலும் மற்ற ஆயர்கள் அனைவரையும் நான் அன்போடும் நன்றியோடும் வாழ்த்துகிறேன். இன்று இங்கி ருக்கும் அனைத்து அதிகாரிகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். மேலும் அன் பார்ந்த குடும்பங்களே, சிறப்பாக உங்களுக்கு எனது வரவேற்பை உரித்தாக்கி கொள் கிறேன். உங்கள் பங்கேற்புக்கு நன்றி!
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், 'திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியார், நம்மை கிறிஸ்துவின் சகோதரர்களாகவும் சகோ தரிகளாகவும் இணைத்து, நம்மை தந்தையின் பிள்ளைகளாக மாற்றுகிறார்; அத னால் நாம், "அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம்' என்று நமக்கு நினைவூட்டு கிறார். விண்ணக மகிமையில் தனது முழு நிறைவைப் பெறுகின்றவரை வளர வேண்டிய புதிய, தெய்வீக வாழ்வின் பொறி நமக்கு வழங்கப்பட்ட தருணத்தில், நாம் கடவுளின் குடும்பமாகிய திருச்சபையின் உறுப்பினர்களாக மாறினோம். புனித அம்புரோஸ் கூறுவது போன்று, "தந்தை, மகன், தூய ஆவியாரின் ஒன்றிப்பில் மக்கள் ஒன் றாகின்றனர்" என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கற்பிக்கிறது. இன்றைய மூவொரு இறைவன் பெருவிழா திருவழிபாடு, இந்த மறைபொருளை நாம் சிந்திக்க அழைப்பதுடன், திரித்துவ ஒற்றுமையின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி கடவுளோடும் பிறரோடும் நாம் ஒன்றித்து வாழவும் அழைப்பு விடுக்கிறது. இணக்கத்தின் ஆவியில் விசுவாச உண்மைகளில் பயணிக்கவும் பெற்றுக்கொள்ளவும், ஒருவர் மற்றவருக் காகவும் எல்லோருக்காகவும் நமது அன்பை வாழவும், இன்பங்களையும் துன்பங்களை யும் பகிர்ந்துகொள்ளவும், மன்னிப்பைத் தேடவும் வழங்கவும், ஆயர்களின் தலைமை யின்கீழ் வெவ்வேறு தலைமைப்பண்புகளை மதிப்பிடவும் நாம் அழைக்கப்பட்டுள் ளோம். திரித்துவத்தின் அழகை பிரதிபலிக்கும் வகையிலும், வார்த்தையிலன்றி, வாழும் அன்பின் பலத்தால் ஏற்படுத்தும் நற்செய்திப் பணியின் கதிவீச்சாலும், குடும்பங்களைப் போன்ற திருச்சபை சமூகங்களை கட்டியெழுப்பும் பணி நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
   திருச்சபை மட்டுமல்ல, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் குடும்பமும், மூன்று ஆள்களாக இருக்கும் ஒரே கடவுளின் சாயலாகத் திகழ்வதற்கு அழைக்கப்படுகின்றது. திருமண மான அன்புத் தம்பதியரே, நீங்கள் உங்களது திருமணத்தை வாழும்போது ஒருவருக் கொருவர் ஏதோ குறிப்பிட்ட ஒருபொருளை அல்லது செயலை வழங்குவதில்லை, ஆனால் உங்களது முழுவாழ்வையுமே வழங்குகிறீர்கள். உங்களது ஆசைகள், ஒருவர் மற்றவர் விருப்பத்தை நிறைவேற்றல், கொடுப்பதிலும் பெறுவதிலும் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றால் உங்களது அன்பு, முதலும் முக்கியமுமாக உங்களுக்கே பயனுள்ளதாக இருக்கின்றது. உங்களது பிள்ளைகளைப் பொறுப்புடனும் தாராளமனத்துடனும் பெற்றெடுத்து அவர்களது நலனில் அக்கறை காட்டி ஞானம் நிறைந்த கல்வியை அளிப்பதிலும் இது பயன்மிக்கதாக இருக்கின்றது. மனிதரை மதித்தல், நன்றிமனப்பான்மை, நம்பிக்கை, பொறுப்பு, ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு போன்ற சமூகப் பண்புகளின் முதல் கல்விக்கூடமாகவும் குடும்ப வாழ்வு அமைந் துள்ளதாலும் இது பயனுள்ளதாக இருக்கின்றது. அன்புத் தம்பதியரே, தொழில் நுட்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இன்றைய உலகில் உங்களது பிள்ளைகள்மீது கண்ணும் கருத்துமாய் இருந்து, சலனமற்ற மனநிலை மற்றும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான அர்த்தங்களையும், விசுவாசத்தின் வல்ல மையையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உயர்ந்த இலட்சியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களது பல வீனங்களில் அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். குடும்பங்களாக இருப்பதென்பது, கடவுள் உறவில் தொடர்ந்து நிலைத்திருந்து, திருச்சபையின் வாழ்க்கையில் பங்கு கொள்வதாகும். அதாவது, உரையாடலை வளர்த்து, ஒருவர் ஒருவரின் கண்ணோட் டத்தை மதித்து, சேவை செய்வதற்குத் தயாராக இருந்து, பிறர் தவறும்போது பொறுமை காத்து, பிறரை மன்னித்து, மன்னிப்புக் கேட்டு, மோதல்கள் ஏற்படும்போது அறிவு மற்றும் பணிவால் அவற்றைச் சமாளித்து, பிற குடும்பங்களுக்குத் திறந்த மனதாக இருந்து, ஏழைகள்மீது அக்கறை காட்டி, சமுதாயத்தில் பொறுப்புள்ளவர் களாய் வாழ்வதாகும்.
   திருமணமுறிவு பெற்றவர்கள் மற்றும் பிரிந்து வாழும் தம்பதியரையும் மறந்து விடாமல், அவர்களது போராட்டங்களில் நானும் திருச்சபையும் உடன் இருக்கிறோம். இவர்கள், குடும்பம் குறித்த திருச்சபையின் போதனைகளை ஏற்றுக்கொண்டாலும், இந்தப் பிரிவுகளின் வேதனையான அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள். கடவுள் சாயலில் ஆண் மற்றும் பெண்ணாக இருப்பது என்பது, வேலை, அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றின் வழியாக உலகை மாற்றுவதற்கு கடவுளோடு ஒத்துழைப்ப தாகும். நவீனப் பொருளாதாரக் கொள்கைகளில் வேலை, உற்பத்தி மற்றும் சந்தை பற்றிய கருத்தியல், பயன்கருதியதாக இருக்கின்றது. ஆயினும், பயனீட்டுமுறை மற்றும் அதிகப்படியான இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட கூறுகள், நல் லிணக்கமான முன்னேற்றத்துக்கும், குடும்பத்தின் நலனுக்கும், நியாயமான சமுதா யத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சாதமாக இல்லை என்பதைக் கடவுளின் திட்டமும் நமது அனுபவமும் காட்டுகின்றன. ஏனெனில் இவை அச்சமூட்டும் போட்டிகளின் எழுச்சியில் சமத்துவமின்மைகளையும், சுற்றுச்சூழல் அழிவையும், நுகர்வுப்பொருள் களில் போட்டியையும், குடும்பத்தில் பதட்டங்களையும் உருவாக்குகின்றன. உண்மை யில் இந்தப் பயன்பாட்டு மனப்பான்மை, தனிப்பட்ட மற்றும் குடும்ப உறவுகளைப் பாதிக்கின்றது, உறுதியான சமூகத்தின் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கின்றது, தனிப்பட்டவரின் ஆதாயத்தில் கவனம் குவிகின்றது.
   இறுதியாக ஒன்று: மனிதர் கடவுளின் சாயலாக ஓய்ந்திருக்கவும் கொண்டாடவும் அழைக்கப்படுகின்றனர். படைப்பு பற்றிய பதிவுகள் இந்த வார்த்தைகளுடன் நிறைவ டைகின்றன: "மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந் தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவுபெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத் தினார்." கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஞாயிறே விழா நாள், ஆண்டவரின் நாள், வாராந்திர ஈஸ்டர். இது திருச்சபையின் நாள், நாம் இன்று செய்வதுபோல, அவரில் ஊட்டம்பெறவும், அவரது அன்பில் நுழையவும், அவரது அன்பால் வாழவும், வார்த் தையின் மற்றும் நற்கருணைப் பலியின் மேசையைச் சுற்றி ஆண்டவரால் ஒன்று கூட்டப்பட்ட அவை. இது மனிதர் மற்றும் அவர்களது மதிப்பீடுகளின் நாள்: நட்பு, மகிழ்ச்சி, பண்பாடு, இயற்கை, கலை, விளையாட்டு ஆகியவற்றுடனான நெருக்கம். கொண்டாட்டம், சந்திப்பு, பகிர்தல், திருப்பலியில் பங்கேற்றல் ஆகியவற்றின் மன நிலையை இணைந்து அனுபவிக்கும் குடும்பங்களின் நாள் இது. அன்பு குடும்பங் களே, நவீன உலகின் தாளங்கள் இடைவிடாமல் தொடர்ந்தபோதிலும், ஆண்டவரின் நாளுக் குரிய மனநிலையை இழந்துவிடாதீர்கள்! இது பாலைவனச் சோலையில் நின்று, சந்திப்பின் மகிழ்ச்சியை சுவைப்பதாகவும், கடவுளுக்கான நமது தாகத்தை தணிப்ப தாகவும் உள்ளது.
   குடும்பம், வேலை, கொண்டாட்டம்: இவை கடவுளின் கொடைகளில் மூன்று, இசைவான சமநிலைக்கு கொண்டுவரப்பட வேண்டிய நமது வாழ்வின் மூன்று பரி மாணங்கள். குடும்ப தேவைகளை வேலை நேரங்களுடனும், தாய்மையை தொழில் முறை வாழ்க்கையுடனும், கொண்டாட்டத்தை வேலையுடனும் இசைந்திருக்கச் செய்வது, இந்த சமூகத்தை மனிதத்தன்மையோடு கட்டியெழுப்ப முக்கியமான தாகும். இதில் முதலில் கட்டியெழுப்பவும், இரண்டாவது அழிப்பதை நிறுத்தவும் எப்பொழுதும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்திலும் முதன்மையாக நாம் குடும்பத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது, உண்மையான அன்பில், கடவுளிடம் இருந்து வரும் கனிவு நம்மை அவரோடு இணைக்கிறது, இதனால் இந்த கனிவு நம்மை 'நாமாக' அதாவது நமது பிரிவினைகளை நீக்கி, முடிவில் கடவுளே அனைத் திலும் அனைத்துமாய் இருக்கும் வரை நம்மை ஒன்றாக்குகிறது. - ஆமென்.