Sunday, April 29, 2012

ஏப்ரல் 29, 2012

குருத்துவ வாழ்வு என்பது கடவுளின்
உடனிருப்பில் வாழ்வதாகும் - திருத்தந்தை

   இறையழைத்தலுக்கான உலக செப நாளான ன்று தூய பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை 16ம் பென டிக்ட் தலைமையில் நிகழ்ந்த திருப்பலியில், ஒன்பது திருத்தொண்டர்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப் பட்டனர். புதிய குருக்களுக்கும் கூடியிருந்த அனைவ ருக்கும் திருத்தந்தை பின்வருமாறு மறையுரை வழங்கினார்:
   குரு என்பவர் ஆயரைப் போன்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை உண்மையின் மிகுதி யான வாழ்வுக்கு வழிநடத்த அழைக்கப்பட்டவர். குருத்துவ வாழ்வின் மதிப்பீடு சமூகப் பணிகளோடு மட்டும் தொடர்புகொண்டது அல்ல; அது கடவுளின் ஆழ்ந்த உடனிருப்பில் வாழும் வாழ்வாகும். குருவின் சிலுவை பாரம் வாழ்வில் அதிகரிக் கும்போது, அந்த உடனிருப்பு மிகவும் ஆழமாக இருக்கிறது. இயேசு அவரது மக்கள் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு வாழ்வை அனுபவித்தார். இருந்தாலும் தந்தையாம் கடவுளின் உதவியால், அவர் ஒரு புதிய திருச்சபையை நிறுவினார். குருவும் இயேசுவின் வாழ்க்கை அனுபவத்தை வாழ, போதிக்கும் மற்றும் குணப் படுத்தும் பணிகளுக்காக தன்னை முழுமையாக கையளிக்க அழைக்கப்படுகிறார்.

   திருப்பலியைத் தொடர்ந்து பாஸ்கா மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, "இன்றைய நற்செய்தி தனது மந்தைக்காக உயிரையே கொடுக்கும் நல்ல ஆயாராம் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறது. இன்று நாம் குருத்துவ அழைத்தலுக்காகவும் செபிக்கிறோம்: அதிகமான இளம் ஆண்கள் கிறிஸ்துவின் அழைப்பைக் கேட்டு அவரை நெருக்கமாக பின்பற்றவும், தங்கள் சகோதர சகோதரிகளுக்கு பணியாற்ற தங்கள் வாழ்வைக் கையளிக்கவும் முன்வரட்டும். இன்றைய தினம் திருநிலைப் படுத்தப்பட்ட இளம் குருக்கள் மற்ற இளையோரிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்லர், மாறாக இறைவனின் ஆழ்ந்த ன்பால் தொடப்பட்டவர்கள். கடவுளின் அமைதி உங்கள் அனைவரோடும் இருப்பதாக!" என்றார்.