Thursday, April 5, 2012

ஏப்ரல் 5, 2012

திருச்சபையின் புதுப்பித்தலுக்கு பணிவின்மையின்
பாதை ஒருபோதும் உதவாது - திருத்தந்தை

   புனித வியாழன் காலையில், கர்தினால்கள், ஆயர்கள் குருக்கள் என, 1,600க்கு மேற்பட்டோரும், ஆயிரக்கணக் கான பொதுநிலை விசுவாசிகளும் கலந்து கொண்ட திரு எண்ணெய் அர்ச்சிப்புத் திருப்பலியை தூய பேதுரு பசி லிக்கா பேராலயத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மறையுரை ஆற்றினார்.
   குருகுலத்தார் அனைவரும் தங்களது குருத்துவத் திரு நிலைப்பாட்டின் உண்மையான அர்த்தம் பற்றிச் சிந்திப் பதற்கு இந்நாளைப் பயன்படுத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஓர் அருட்பணியாளர் ஒருபோதும் தனக் குச் சொந்தமானவர் அல்ல, மாறாக, சிலுவை மரணம் வரை வாழ்ந்து காட்டிய கிறிஸ்துவின் பணிவு உள்ளிட்ட அவரது வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் ஒத்துப்போகும் விதத்தில் அருட்பணியாளர் எப்போதும் இயேசுவுக்கு உரியவராய் இருப்பதன் வழியைத் தேடு கிறார், மேலும், பணிவின்மையின் பாதை அது திருச்சபையைப் புதுப்பிக்காது.
   நம் ஆண்டவர் இயேசுவுடன் மென்மேலும் ஒன்றித்திருக்கவும், அவருக்கு நெருக் கமுடையவர்களாக வாழவும் உறுதி பூண்டுள்ளோமா? இதற்கு ஒருவர் தனக்குரி யதை, தன்னிறைவு வீண்பெருமையை உதறித்தள்ள வேண்டியிருக்கிறது, இதில் நீங்களும் நானும், நமது வாழ்வை நமக்குரியதாக்காமல், அடுத்தவருக்குரியதாய், கிறிஸ்துவுக்குரியதாய் ஆக்க வேண்டியிருக்கின்றது. இதனை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், கிறிஸ்துவுக்கு உகந்தவராய் இருப்பது, பணிவிடை பெறுப வராக அல்ல, பணிவிடை செய்பவராக இருப்பதிலும், எடுப்பவராக அல்ல, கொடுப்பவ ராக இருப்பதிலும் உள்ளது.
   குருத்துவத்தின் தன்மை இதுவென்றால், இன்றையத் திருச்சபை திடீர் திருப்ப நிலைமையை அடிக்கடி எதிர்கொள்ளும் போது குருக்களின் பதில் எத்தகையதாக இருக்க வேண்டும்? பெண்களின் குருத்துவத் திருநிலைப்பாடு உள்ளிட்ட திருச்சபை யின் அதிகாரப்பூர்வப் போதனைகளுக்கு எதிராகப் பணிவின்மை அறிக்கை ஒன்றை ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்து (ஆஸ்ட்ரியாவின் 250) குருக்கள் குழு ஒன்று அண்மையில் வெளியிட்டது. பெண்களின் குருத்துவத் திருநிலைப்பாடு குறித்த விவகாரம் பற்றி அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் வெளியிட்ட அறிக்கையில், திருச்சபை, நம் ஆண்டவரிடமிருந்து எந்த அதிகாரத்தையும் பெறவில்லை. இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் திருச்சபையின் மீது கொண்டுள்ள அக்கறையால் ஒருவேளை, தூண்டப்பட்டிருக்கலாம், திருச்சபையை காலத்துக்கு ஏற்ற விதத்தில் அமைப்பதற்கும், புதி்ய பாதைகளைத் திறந்துவிடுவதற்கும் இத்தகைய நடவடிக்கை கள் உதவும் என நம்பியிருக்கலாம்.
   ஆனால், இதைச் செய்வதற்கு இந்தப் பணிவின்மை அறிக்கை உண்மையான பாதையா? உண்மையான புதுப்பித்தல் என்பது, கிறிஸ்துவோடும் இறைவனின் விருப்பத்துக்கும் ஒத்து போவதாய் இருக்கும் வாழ்க்கையில் அடித்தளத்தைக் கொண்டதாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவும் மனித மறுதலிப்புக்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் வழிகளைத் தேடினார், ஆனால் இறைவனின் வார்த்தை களையும், அவரது விருப்பத்தையும் மறைக்கும் பழக்கவழக்கங்களை மட்டுமே அவர் திருத்த முயற்சித்தார். இறைவனுக்குத் தாழ்மையுடன் பணிந்து நடந்து அவரது திருச்சபையின் போதனைகளைப் பின்பற்றுவது, மரபுகளைப் பாதுகாப்பதற்கு சாக்குப் போக்குகள் ஆகாது.
   உண்மையான புதுப்பித்தல் எப்படி இருக்கிறது என்பதை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்துக்குப்பின் வந்த காலம் காட்டுகிறது, இதனைப் பல புதிய இயக்கங் கள் மற்றும் வாழ்வு முறைகளில் காண முடிகின்றது. இவை தீவிரப் பணிவாலும், விசுவாசத்தின் மகிழ்ச்சியாலும், உயிரோட்டமான நம்பிக்கையாலும், அன்பின் சக்தி யாலும் நிறைந்துள்ளன. சிறப்பான விதத்தில் திருச்சபைக்குப் பணிசெய்து அதனைப் புதுப்பிப்பதற்கும் மனித சமுதாயத்துக்குத் திருப்பணி செய்வதற்கும் எல்லாக் குருக் களும், கிறிஸ்துவையும் புனிதர்களையும் தொடர்ந்து பின்பற்றுங்கள். பெருமளவான எண்ணிக்கையிலும் வெளிப்படையான வெற்றிகளிலும் இறைவன் கருத்தாய் இல்லை. மாறாக, கடுகுவிதை போன்ற தாழ்மையான அடையாளங்களில் அவரது வெற்றிகள் இருக்கின்றன.
   போதகர்கள் என்ற உங்களது பணியை ஆயர்களும் குருக்களும் நினைவுபடுத்தி, நமது நவீன சமுதாயத்தில் வளர்ந்து வரும் சமய அறிவற்றதன்மைக்கு எதிராகச் செயல்பட வருகின்ற விசுவாச ஆண்டைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தனிப்பட்ட கொள்கைகளையும் கருத்துக்களையும் அல்ல, ஆனால் நாம் திருச்சபையின் விசுவாசத்தைப் போதிக்கிறோம், இப்போதனைகளின் உண்மையான வழிகாட்டிகள் திருமறைநூலில் இருப்பது மட்டுமல்ல, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தொகுப்புகள், கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக் கல்வி ஏடு, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் எழுத்துக்கள் ஆகிய வற்றிலும் உள்ளன. இந்தப் போதனைகள் போதிப்பவர்களின் வாழ்க்கையில் காணக் கூடிய விதத்தில் வாழ்ந்து காட்டப்பட வேண்டும்.